MUTHUPETTAIPEOPLE



counter

MUTHUPETTAI PEOPLE

Tuesday, 29 October 2013






முத்துப்பேட்டை, அக்டோபர் 26: முத்துப்பேட்டை பகுதியில் சமீப காலமாக டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவி வருகிறது. மேலும் டெங்கு காய்ச்லால் பாதிக்கப்பட்டவர்கள் முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் போன்ற மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளர்;. இதனால் பொதுமக்கள் சார்பில் அதிர்ச்சியும் அச்சமும் ஏற்பட்டது. இந்த நிலையில் முத்துப்பேட்டை தனியார் மெட்ரிக் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஹாஜி என்பவரது மகள் சஜிரா(7) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு முத்துப்பேட்டை தனியார் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகிறார். இந்த செய்தியை அறிந்த பொதுமக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


 இதற்கு காரணம் நகரில் ஏற்பட்டுள்ள அசுத்தங்கள்தான் என்று அறிந்த சுகாதாரத்துறை முத்துப்பேட்டை பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு அதிரடியாக ஒட்டுமொத்த சுகாதார பணியை மேற்கொள்ள உத்தரவிட்டது. அதன்படி நேற்று முதற்கட்டமாக 13-வது வார்டு பகுதியில் மாவட்ட சுகாதாரத் துறை பூச்சியியல் அலுவலர் பழனிச்சாமி தலைமையில் பேரூராட்சி கவுன்சிலர் நாசர் வட்டார சுகாதாரத்துறை அதிகாரி பாஸ்கரன் முத்துப்பேட்டை சுகாதாரத்துறை ஆய்வாளர் பழனியப்பன் பேரூராட்சி சுகாதார அலுவலர் வீரமணி சமூக ஆர்வளர் நிஜாமுதீன் ஆகியோரது முன்னிலையில் வீடுவீடாகச் சென்று தேவையற்ற பொருட்கள் மற்றும் அசுத்தங்களை கைப்பற்றிச் சென்றனர். 

மேலும் தெருக்களில் உள்ள குப்பைகளை பேரூராட்சி துப்புறவு பணியாளர்களைக் கொண்டு அனைத்தையும் அப்புறப்படுத்தரினார்கள். இந்த பணியில் கொசு உற்பத்தி பரிசோதகர்கள் பாஸ்கர், சதீஸ்குமார், மகாலிங்கம், கோகுல சந்திரன், அமிர்தலிங்கம், ராமசாமி, ராஜேஸ்வரன், செவிலியர்கள் சாந்தி, வசந்தா மற்றும் துப்பறவு பணியாளர்கள் ஈடுபட்டனர். அதுபோல் 17-வது வார்டு பகுதியில் வார்டு கவுன்சிலர் செல்விதம்புசாமி நுகர்வோர் பாதுகாப்பு குழு செயலாளர் தம்புசாமி முன்னாள் கவுன்சிலர் மைநூர்தீன் முன்னிலையில் ஒட்டுமொத்த சுகாதார பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும் சுகாதாரத்துறை பேரூராட்சி நிர்வாகம் அதிரடியாக செய்த சுகாதார பணியால் முத்துப்பேட்டை மக்கள் திருப்தியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment