MUTHUPETTAIPEOPLE



counter

MUTHUPETTAI PEOPLE

Tuesday, 24 December 2013

டெல்லியில் கடும் மூடுபனி: 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்!!

டெல்லியில் காலை கடுமையான மூடுபனி நிலவியது. 50 மீட்டருக்கு அப்பால் உள்ள எதனையும் பார்க்க முடியாதபடி பனி மூடியிருந்தது. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 3-வது ஓடுபாதையில் மூடுபனி காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால்
அந்த ஓடுபாதையில் இருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் மிகவும் தாமதமானது.

இதன் காரணமாக விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

விமான நிலைய ஊழியர்களும் விமான வருகை மற்றும் புறப்பாடுகளை நிர்வகிப்பதில் மிகவும் சிரமப்பட்டனர். ஆனாலும் விமான போக்குவரத்து எதுவும் நிறுத்தப்படவில்லை என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

No comments:

Post a Comment