MUTHUPETTAIPEOPLE



counter

MUTHUPETTAI PEOPLE

Sunday, 8 December 2013

முத்துப்பேட்டை அருகே இரு சக்கர வாகன விபத்தில் இருவர் படுகாயம்.!!!

 1149201_657279690982357_1543456325_o அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவைச் சேர்ந்தவர்கள் முஜீப் ரஹ்மான், இர்ஷாத். நண்பர்களான இவர்கள் இருவரும் இன்று இரு சக்கர வாகனத்தில் கட்டிமேட்டில் உள்ள தனது நண்பர் ஜாஹிரிடம் திருமண பத்திரிக்கைகளை வாங்கிக்கொண்டு ஊர் திரும்பும் வழியில் கட்டிமேடு பாலத்தை கடக்கும்போது விபத்துக்குள்ளானர்கள்.
இதில் பலத்த காயங்கள் ஏற்பட்ட இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். இதில் பலத்த காயங்கள் ஏற்பட்ட இருவரையும் மேற் சிகிச்சை அளிப்பதற்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சையளித்து வருகின்றனர். இதில் பலத்த காயமடைந்த முஜிபூர் ரஹ்மான் இன்னும் சுயநினைவு திரும்பவில்லை.
தகவலறிந்த இடையூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வல்ல அல்லாஹ் இவர்கள்  இருவருக்கும் பரிபூரண நலம் பெற்று விரைவில் வீடு திரும்ப  கருணை காட்டுவானாக.

No comments:

Post a Comment