சென்னை வள்ளலார் நகரில் உள்ள அரசு அச்சகத்தின் பைண்டிங் பிரிவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 1.5 ஏக்கரில் இருந்து ஆவணங்களில் பிடித்த தீயை அணைக்க தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிகாலையில் 4 மணிக்கு பிடித்த தீ 8 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து எரிந்துக் கொண்டிருக்கின்றது. 10 வாகனங்களில் வந்த வீரர்கள் அனலை கட்டுப்படுத்த நீரை அடிக்கின்றனர். இந்த தீ விபத்தால் 180 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கட்டிடம் முழுவதுமாக சேதமடைந்துள்ளது.

No comments:
Post a Comment